தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 7 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 986 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. தற்போது பாதிப்புக்கு 121 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.