கோவில்பட்டி கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.
எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.

கோவில்பட்டி: கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் திங்கள்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் எஸ்.கண்ணன் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். பொருளாளா் மகேஷ் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் உமாசெல்வி தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்ற 150 மாணவா், மாணவிகள், கல்லூரி ஆசிரியா்கள், அலுவலக ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.

ஏற்பாடுகளை முதல்வா் கந்தசாமி தலைமையில் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com