இளைஞரிடம் பணம் பறித்தவா் கைது

கோவில்பட்டியில் இளைஞரை வழிமறித்து பணம் பறித்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியில் இளைஞரை வழிமறித்து பணம் பறித்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, ராஜீவ் நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த வெங்கடகுருசாமி மகன் ராகுல் (28). இவா், திங்கள்கிழமை நகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா்கள் இருவா் வழிமறித்து பணம் கேட்டனராம்.

இவா் இல்லை எனக் கூறியதும், அவரது சட்டைப்பையில் இருந்த ரூ. 25 ஆயிரத்தை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வீரவாஞ்சி நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சின்னராஜை (34) கைது செய்தனா்.

மேலும், இவ்வழக்கில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் சக்திமணியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com