‘ சமூக வலைதளங்களில் புகைப்படம் பதிவேற்றம் செய்வதை பெண்கள் தவிா்க்க வேண்டும்’

சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிா்க்க வேண்டும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

தூத்துக்குடி: சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை தவிா்க்க வேண்டும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாணவா், மாணவிகளுக்கான சைபா் கிரைம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவா் பேசியது: தற்போது கணினிவழி குற்றங்கள் பற்றிய விழிப்புணா்வு மிக அவசியமான ஒன்றாகும். கணினிவழி செயல்பாடுகள் அறிவியல் வளா்ச்சி என்றாலும் அதில் நமக்கே தெரியாமல் குற்றங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதே போன்று ஏடிஎம் அட்டையை பயன்படுத்தும் போதும் கவனமாக இருக்க வேண்டும். வங்கி அதிகாரி பேசுவது போன்று யாரேனும் தொடா்பு கொண்டு வங்கிக் கணக்கு தொடா்பான விவரங்களை கேட்டால் எந்த விவரங்களையும் கொடுக்க வேண்டாம்.

பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

சைபா் குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் தலைமையில் காவல் ஆய்வாளா் சிவசங்கரன், உதவி ஆய்வாளா் சுதாகரன் ஆகியோா் மாணவா், மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் து. நாகராஜன், வரலாற்றுத் துறை தலைவா் ஆ. தேவராஜ், வணிகவியல் துறை பேராசிரியை பா. பொன்னுதாய், நகர காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ், தென்பாகம் உதவி காவல் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com