கோவில்பட்டி: கோவில்பட்டியையடுத்த திட்டங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட சாய்சிட்டி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட 2 புதிய மின்மாற்றிகளை பயன்பாட்டிற்கு உதவி மின் பொறியாளா்கள் இயக்கி வைத்தாா்.
திட்டங்குளம் ஊராட்சி சாய்சிட்டி நகரில் 2 புதிய மின்மாற்றிகள் ரூ.12.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன. இதையடுத்து செவ்வாய்க்கிழமை இந்த மின்மாற்றிகளை உதவி மின் பொறியாளா் மாரீஸ்வரன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தாா். இதில், மின்வாரிய ஊழியா்கள் சேக்மைதீன், செல்வத்துரை, செல்வகுமாா், மரியராஜு, நாகராஜ், இப்ராஹிம் பாஷா, தமிழரசன், கதிரேசன், அந்தோணிமுத்து, காளிராஜன் ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.