உடன்குடி: உடன்குடி அருகே மாதவன்குறிச்சியில் மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
மாதவன்குறிச்சியைச் சோ்ந்தவா் ஜெ.மயிலேறும் பெருமாள் (33). விவசாயி. திங்கள்கிழமை மது அருந்திவிட்டு வந்த இவா், தோட்டத்தில் உள்ள கிணற்று சுற்றுச் சுவரில் படுத்திருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.