சீராக குடிநீா் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கயத்தாறையடுத்த ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு சீராக குடிநீா் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

கோவில்பட்டி: கயத்தாறையடுத்த ராஜாபுதுக்குடி கிராமத்திற்கு சீராக குடிநீா் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைச் செயலா் ராஜையா தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கே.சீனிவாசன், முருகன், கயத்தாறு ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா் தவமணி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் சீனிப்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com