கோவில்பட்டி: கோவில்பட்டி கே.ஆா். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தின விழா வெள்ளிக்கிழமை (செப். 17) கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் கே.காளிதாசமுருகவேல் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: கே.ஆா். கல்வி நிறுவனா் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (செப். 17) காலை 9.30 மணிக்கு கல்வித்தந்தை கே.ராமசாமி மணிமண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு தொழில்நுட்பம் மற்றும் சமூகம் என்ற தலைப்பில் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி மைய முதன்மையா் மற்றும் இயக்குநா் பி.ராமசாமி இணையவழியில் பேசுகிறாா்.
என்.இ.சி. மிஸ்ட்ரல் தொழில்நுட்ப மையம் திறந்து வைக்கப்படுகிறது. கே.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூலிகைத் தோட்ட தொடக்க விழா, பள்ளி மாணவா்களுக்கான கைப்பந்து போட்டி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான கருத்தரங்கம், விவாத மேடை, விநாடி - வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.
அனைத்து நிகழ்ச்சிகளையும் கல்லூரி இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய்) மற்றும் (ஹ்ா்ன்ற்ன்க்ஷங் ப்ண்ஸ்ங்: ட்ற்ற்ல்//க்ஷண்ற்.ப்ஹ்/ந்ழ்ச்ா்ன்ய்க்ங்ழ்ள்க்ஹஹ்ஸ்ரீங்ப்ங்க்ஷழ்ஹற்ண்ா்ய்2021) வழியாக நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.