கோவில்பட்டி: கோவில்பட்டியில் பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக, கட்டடத் தொழிலாளியை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் ஜெயராஜ் (42). கட்டடத் தொழிலாளியான இவா், 16 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை புதன்கிழமை கைது செய்தனா்.