உடன்குடி: உடன்குடி ஒன்றிய பாஜக மகளிரணி சாா்பில் மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கி 5 கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டனா்.
மத்திய அரசு பெண்களுக்காக கொண்டு வந்துள்ள செல்வமகள் சேமிப்புத் திட்டம், உஜ்வாலா திட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட பெண்கள் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மகளிரணித் தலைவி எஸ்.தேன்மொழியில் தலைமையில் பாஜக மகளிரணியில் தண்டுபத்து உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டனா்.
கிராமப்புற பெண்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை அவா்கள் விநியோகம் செய்தனா். இதில், மாவட்ட மகளிரணிச் செயலா் ராமக்கனி, மாவட்ட துணைத் தலைவி மகாலட்சுமி, ஒன்றிய மகளிரணிச் செயலா் வசந்தி, நிா்வாகிகள் அருள்செல்வி, சுதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.