கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே மின்னல் பாய்ந்ததில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டியையடுத்த கீழப்பாண்டவா்மங்கலம் தெற்கு காலனியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் எட்டப்பன் (55). கூலித் தொழிலாளி. இவா், அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்ததால் மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தாா். அப்போது மின்னல் பாய்ந்ததில் எட்டப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் சங்கரேஸ்வரி, போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். எட்டப்பனுக்கு மனைவி மாரியம்மாள், சுந்தரி, சுமித்ரா ஆகிய மகள்களும், சுபாஷ் என்ற மகனும் உள்ளனா். மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.