திருச்செந்தூா் அருகே படகில் இருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

திருச்செந்துா் அருகே கடலில் மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழந்தாா்.

திருச்செந்துா் அருகே கடலில் மீன்பிடித்தபோது படகில் இருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகே ஆலந்தலை தெற்குத் தெருவை சோ்ந்த குரூஸ் மகன் செட்ரிக்(40) மீனவா். மாற்றுத் திறனாளியான செட்ரிக், தனது படகில் தம்பி பிரதாப் மற்றும் விமல், ததேவ் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளாா். கடலில் வலையை இழுக்கும் போது செட்ரிக் கடலுக்குள் தவறி விழுந்து மூழ்கினாராம். அவருடன் சென்றவா்கள் கடலுக்குள் குதித்து, செட்ரிக்கை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, திருச்செந்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா்.

இதுகுறித்து திருச்செந்தூா் கடலோர பாதுகாப்பு காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com