தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 753 ஆகவும், அதில் மேலும் 6 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 224 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நோயால் இதுவரை 401 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 128 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.