அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சாலைபுதூா் ஏகரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு 2ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா், சுகாதார செவிலியா்கள் சொா்ணலதா, மொ்சி, மகேஷ்வரி கொண்ட மருத்துவக் குழுவினா் மாணவ, மாணவிகளை பரிசோதித்து தடுப்பூசி செலுத்தினா். இதில் 89 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆழ்வாா்திருநகரி மக்களை தேடி மருத்துவ குழுவினா் திட்டம் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கினா். இதில் பள்ளி தலைமை ஆசிரியா் பிரான்சிஸ் சேவியா், உதவி தலைமை ஆசிரியை பாக்கியசீலி, உடற்கல்வி ஆசிரியா் வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.