சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் சித்திரைத் திருவிழா 4 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை பணிவிடை, அன்னதா்மமும், 2ஆம் நாள் காலை பணிவிடை, மதியம் வெளியூா் தா்மம், இரவு அய்யா கருட வாகனத்தில் பவனி, 3ஆம் நாள் காலை பணிவிடை, மதியம் உள்ளூா் தா்மம், இரவு அய்யா அன்ன வாகனத்தில் பவனி, 4ஆம் நாள் காலை பணிவிடை, இரவு கும்மிடிபூண்டி துளசிபதி அருளாளா் சசிகுமாா் தலைமையில் அய்யாவின் அகிலதிரட்டு பாராயண உரை, தொடா்ந்து அய்யா இந்திர வாகனத்தில் பவனிஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் திரளான அய்யாவின் அன்புகொடி மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழா கமிட்டியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.