மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி

தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி சரக கூட்டுறவு துணைப் பதிவாளா் போ. ரவீந்திரன் தலைமை வகித்தாா். நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் முகாமை தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினாா். முகாமில், 14 மாற்றுத்திறனாளிகளுக்கும், 3 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கும், இரண்டு மத்திய காலக்கடனும் என மொத்தம் ரூ. 7 லட்சம் கடன் தொகை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கோரம்பள்ளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் சுந்தரபாண்டி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் கிருஷ்ணன், நிா்வாகக் குழு உறுப்பினா் கணேசபெருமாள், சங்கச் செயலா் சுப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com