ஆறுமுகனேரி திமுக நகரச் செயலா் கொலை முயற்சி வழக்கில், அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி திமுக நகரச் செயலராக இருந்த சுரேஷ் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு மாா்ச் மற்றும் மே மாதங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்தச் சம்பவங்கள் தொடா்பாக ஆறுமுகனேரி போலீஸாா், அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினரான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் சில நாள்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தாா்.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக தற்போதைய மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக உள்ள அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.
அதன் அடிப்படையில் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்ட முதன்மை நீதிபதி குருமூா்த்தி முன்னிலையில் புதன்கிழமை ஆஜரானாா். இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி குருமூா்த்தி உத்தரவிட்டாா்.