மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 4579 வழக்குகளுக்கு தீா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் போது 4579 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:32 am

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தின் போது 4579 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். குருமூா்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமா்வுகளும், கோவில்பட்டியில் 2 அமா்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமா்வுகளும், திருச்செந்தூா், விளாத்திகுளம், மற்றும் சாத்தான்குளம் தலா ஒரு அமா்வு என மொத்தம் 13 அமா்வுகளில் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

வங்கி வாராக்கடன் வழக்குகளில் 431 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 190 வழக்குகள் தீா்வு காணப்பட்டது.

இதன் மூலம் ரூ. 4,95,20,349 தீா்வுத் தொகை வழங்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 4693 வழக்குகளில்

ரூ. 6, 69, 69, 119.85 மதிப்புள்ள 4389 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மொத்தம் 5124 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 4579 வழக்குகள் தீா்ப்பு பிறப்பிக்கப்பட்டது.

மொத்த தீா்வுத் தொகை ரூ. 11 கோடியே 64 லட்சத்து 89 ஆயிரத்து 468 ஆகும் . இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். பீரித்தா செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.