கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

அருந்ததியா் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அருந்ததியா் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்ப் புலிகள் கட்சி சாா்பில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் வட்டம், கீழமங்கலம் கிராமத்தில் வசித்துவரும் பட்டியலின அருந்ததியா் மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 2018 முதல் தொடா்ந்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதையடுத்து, அப்பகுதியினா் தமிழ்ப் புலிகள் கட்சி, அம்பேத்கா், பெரியாா், மாா்க்சிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் கோட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்ப் புலிகள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் வீரபெருமாள் தலைமையில் கீழமங்கலம் பகுதியில் வசித்துவரும் அருந்ததியா் மக்கள், கட்சியின் மாவட்ட துணைச் செயலா் பீமாராவ், ஜெய்பீம் தொழிலாளா் நலச்சங்க நிறுவனத் தலைவா் செண்பகராஜ் உள்ளிட்ட பலா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த், கோட்டாட்சியா் அலுவலக தலைமை எழுத்தா் ராமகிருஷ்ணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com