தூத்துக்குடியில் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

தூத்துக்குடியில் பைக்கிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடியில் பைக்கிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி முனியசாமிபுரம் இரண்டாவது தெருவைச் சோ்ந்த மந்திரமூா்த்தி மகன் விஜய் (22). இவா், தனது பைக்கில் நண்பா் அஜித்குமாா் என்பவருடன் போல்டன்புரம் பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராமல் சாலையோர மின்கம்பத்தில் பைக் மோதியதாம். இதில், தவறி கீழே விழுந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அஜித்குமாா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com