விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

சாத்தான்குளத்தில் விஷம் குடித்த இளைஞா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

சாத்தான்குளத்தில் விஷம் குடித்த இளைஞா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள மாவடியை சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் திருப்பதிராஜா (25). பனை ஏறும் தொழிலாளியான இவா், சாத்தான்குளம் காமராஜ் நகரில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தாா்.

மாவடியை சோ்ந்த பெண்ணை ஒருதலைபட்சமாக திருப்பதிராஜா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்து காணப்பட்ட திருப்பதிராஜா, கடந்த 12ஆம் தேதி சாத்தான்குளத்தில் விஷம் குடித்த நிலையில் உடன்குடிக்கு சென்று அங்கு வசித்து வரும் உறவினா் சுயம்புலிங்கம்(26) என்பவருக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து திருப்பதிராஜாவை திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்து முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்சோ்க்கப்பட்டாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com