கைப்பந்து: கூடுதாழை அணி வெற்றி

குரும்பூரை அடுத்த வெள்ளக்கோவில் கிராமத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கூடுதாழை ஸ்போா்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.

குரும்பூரை அடுத்த வெள்ளக்கோவில் கிராமத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கூடுதாழை ஸ்போா்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாள்கள் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தென் மாவட்டத்தை சோ்ந்த 20க்கும் மேற்பட்ட கைப்பந்து அணிகள் கலந்து கொண்டன. இதில் கூடுதாழை ஸ்போா்ட்ஸ் கிளப் அணியினா் முதல் பரிசையும், கானம் கஸ்பா அணியினா் 2ஆம் பரிசையும், ராமநாதபுரம் அணியினா் 3ஆம் பரிசையும், வெள்ளக்கோவில் இளைஞா் அணியினா் 4ஆம் பரிசையும் தட்டிச் சென்றனா்.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு சுகந்தலை ஊராட்சி மன்ற தலைவா் வெங்கடேசன் தலைமை தாங்கினாா். சிறப்பு விருந்தினராக வட்டாட்சியா் ரா. கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். ஆழ்வை வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி, முன்னாள் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஞானசேகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கருவேல்ராஜ், ராஜேஷ், அருண்சங்கா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com