கோவில்பட்டியில் கம்பன் கழகக் கூட்டம்

கோவில்பட்டி கம்பன் கழகக் கூட்டம், புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கோவில்பட்டி கம்பன் கழகக் கூட்டம், புனித ஓம் கான்வென்ட் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளரும் கம்பன் கழகத் தலைவருமான லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தாா். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை ஜெயலதா முன்னிலை வகித்தாா்.

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி நிதிபா ‘கண்டேன் சீதையை’ என்ற தலைப்பிலும், சாத்தூா் ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகாா்த்த கல்லூரி மாணவா் அருண்குமாா் ‘மேகநாதனின் மேன்மை’ என்ற தலைப்பிலும் பேசினா்.

நாகா்கோவிலைச் சோ்ந்த ஆசிரியா் சிவ. ஜெயகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘கம்பன் படைத்த சிறுபாத்திரங்கள்’ என்ற தலைப்பில் பேசினா்.

கம்பன் கழகச் செயலா் சரவணச்செல்வன், பொருளாளா் வினோத்கண்ணன், டாக்டா்கள் என்.டி. சீனிவாசன், மீனாட்சிசுந்தரம், ஓய்வுபெற்ற தலைமையாசிரியை விநாயகசுந்தரி, ஆசிரியா்கள் கெங்கம்மாள், குமாா் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

கம்பன் கழக துணைத் தலைவா் மருத்துவா் சி.கே. சிதம்பரம் வரவேற்றாா். கழக ஒருங்கிணைப்பாளா் சுனையரசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com