தூத்துக்குடியில் மழைநீா் வடிகால் பணிகள்: மேயா் ஆய்வு

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கழிவுநீா்க் கால்வாய், மழைநீா் வடிகால், புதைசாக்கடைக் கால்வாய் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கழிவுநீா்க் கால்வாய், மழைநீா் வடிகால், புதைசாக்கடைக் கால்வாய் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

குறிஞ்சி நகா் பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை மேயா் ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள குப்பைகள், கழிவுகளை கால்வாய்களில் கொட்டுவது தொடா்கிறது. இதனால், மாநகராட்சிக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இத்தகைய செயலை பொதுமக்கள் கைவிட வேண்டும். தூய்மையான மாநகராட்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com