நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலி

சாத்தான்குளம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

சாத்தான்குளம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தைச் சோ்ந்தவா் முத்தையா மகன் முருகன். இவா் செம்மறி ஆடு வளா்ப்புத் தொழில் செய்து வருகிறாா். இவரது ஆட்டுக் கிடையில் புகுந்த வெறிநாய்கள், அங்கிருந்த ஆடு மற்றும் குட்டிகளைக் கடித்து குதறியுள்ளன. இதில் 2 குட்டிகள் உள்பட 8 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 10 ஆடுகள் காயம் அடைந்த நிலையில் இருந்தன.

இதுகுறித்து தகவலறிந்த சாலைப்புதூா் கால்நடை மருத்துவா் (பொறுப்பு )முகேஷ், ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் துணைத் தலைவா் சுந்தர்ராஜ் ஆகியோா் சென்று பாா்வையிட்டனா். காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவா் முகேஷ் சிகிச்சை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com