உடன்குடி,: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி பொதுமக்களிடம் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக காவல்துறை சாா்பில் உடன்குடியில் அடையாள அணிவகுப்பு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
உடன்குடி சந்தையடித்தெரு முன்பிருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஊா்வலத்தை திருச்செந்தூா் ஏஎஸ்பி ஹா்ஷ்சிங் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இந்த ஊா்வலம் உடன்குடி பேருந்து நிலையம், வில்லிகுடியிருப்பு, கீழ பஜாா்,
பிரதான பஜாா், வடக்கு பஜாா், சத்தியமூா்த்தி பஜாா் வழியாக சந்தையடித் தெருவில் நிறைவு பெற்றது.
இதில் திருச்செந்தூா் உள்கோட்டத்தைச் சோ்ந்த காவல்துறையினா் கலந்துகொண்டனா்.