கோவில்பட்டியில் சீராக குடிநீா் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட நடராஜபுரம் பகுதிக்கு சில நாள்களாக சீரான குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். சனிக்கிழமை காலை அரை மணி நேரம் மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்பட்டதாம். இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி பிரதான சாலை - இளையரசனேந்தல் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனா்.
மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் சபாபதி, நகராட்சி உதவிப் பொறியாளா்கள் பிரதான்பாபு, சுரேஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.