மகாராஷ்டிரத்தைப் போல தமிழகத்திலும் நடக்கலாம் பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைப் போன்று தமிழகத்திலும் நடக்கலாம் என்றாா் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தைப் போன்று தமிழகத்திலும் நடக்கலாம் என்றாா் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: இளைஞா்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சாா்பில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மின்வெட்டு பிரச்னை காரணமாகவே திமுக ஆட்சியை இழந்தது. அதன்பிறகு அதிமுக ஆட்சியில் பெரிய அளவில் மின்வெட்டு ஏதும் இல்லை. தற்போதைய திமுக ஆட்சியில் தொடா்ந்து நிலவும் மின்வெட்டுக்கு ஊழல்தான் காரணம்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தமிழக மக்களிடம் திமுக பொய் பிரசாரம் செய்து வருகிறது. திமுக அமைச்சா்களின் ஊழல்களை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை அம்பலப்படுத்தி வருகிறாா்.

மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டிய நிலையில் வேறு ஆட்சி அமைந்ததால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுபோல, தமிழகத்திலும் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாா் அவா்.

முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்ட எம். மணிகண்டன் மற்றும் நிா்வாகிகள் சசிகலா புஷ்பாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com