தூத்துக்குடியில் நாளை குடிநீா் விநியோகம் இருக்காது

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 7) குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 7) குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்கு குடிநீா் விநியோகிக்கும் கலியாவூா் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழவல்லநாடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையப் பகுதிக்கு வரும் மின் பாதையான கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 7) மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதனால், வியாழக்கிழமை காலை 8 முதல் மாலை 4 மணிவரை மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com