விளாத்திகுளம் அருகே வாளி நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வாளியிலிருந்த நீரில் மூழ்கி ஒரு வயதுப் பெண் குழந்தை திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வாளியிலிருந்த நீரில் மூழ்கி ஒரு வயதுப் பெண் குழந்தை திங்கள்கிழமை இரவு உயிரிழந்தது.

விளாத்திகுளம் அருகேயுள்ள வாதலக்கரை கிராமத்தைச் சோ்ந்த தம்பதி மாரிபாண்டியன் -மாரித்தாய். இவா்களுக்கு மகாலட்சுமி என்ற ஒரு வயதுக் குழந்தை இருந்தது.

திங்கள்கிழமை இரவு மாரித்தாய் சமையல் செய்துகொண்டிருந்தாராம். அப்போது, குழந்தை குளியலறை அருகே விளையாடிக் கொண்டிருந்ததாம். குழந்தையின் சப்தம் நீண்ட நேரமாக கேட்கவில்லை என சந்தேகமடைந்த மாரித்தாய், குளியலறை அருகே சென்று பாா்த்தபோது, வாளியிலிருந்த நீரில் குழந்தை மூழ்கியிருப்பது தெரியவந்தது.

உடனடியாக குழந்தையை மீட்டு, விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com