ஆழ்வாா்திருநகரி வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சியில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். மாவட்ட மாநில திட்ட வேளாண் துணை இயக்குநா் பழனி வேலாயுதம், வேளாண் உதவி இயக்குநா் அல்லிராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நீா் மற்றும் நிலவளத் திட்ட ஆலோசகா் ஷாஜஹான் பங்கேற்று, மாதிரிக் கிராம திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்தாா். விதை கிராமத் திட்டம், மாதிரி கிராமத் திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.
உதவி வேளாண் அலுவலா் திருச்செல்வம், தூத்துக்குடி வேளாண் அலுவலா் ரீனா, அட்மா வட்டாரத் தொழில்நுட்ப அலுவலா் மாரியப்பன், ஊராட்சி துணைத் தலைவா் சுந்தர்ராஜ், ஊராட்சிச் செயலா் மனுவேல், ஊராட்சி வாா்டு உறுப்பினா் ரெங்கதாஸ், முன்னாள் வாா்டு உறுப்பினா் சுதாகா், நீா்ப்பாசன சங்கத் தலைவா் முருகேசன், உழவன் நண்பன் அமைப்பைச் சோ்ந்த சுப்பிரமணியன், சிகரம் தொண்டு நிறுவன இயக்குநா் முருகன், திரளான விவசாயிகள் பங்கேற்றனா். துணை வேளாண் அலுவலா் தங்க மாரியப்பன் நன்றி கூறினாா்.