சாலை விபத்தில் மேலும் ஒருவா் பலி

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த முதல்நிலை காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த முதல்நிலை காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விளாத்திகுளத்தையடுத்த வெங்கடேஸ்வரபுரத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் மாா்ஷல் ராஜா(38). காடல்குடி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்த இவா், தனது மனைவி தேவிகா (30), மகன்கள் ரஸ்வந்த் (6), ரிஷாந்த் (4) ஆகியோருடன் பைக்கில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, காா் மோதியதில், 4 பேரும் காயமடைந்தனா்.

இதில், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷாந்த் உயிரிழந்தாா். மாா்ஷல் ராஜா மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மற்றவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து, கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் விளாத்திகுளம் பூமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த து.சிவராமசந்திரனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com