கோவில்பட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ராஜாராம் முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் ஜேம்ஸ் அதிசயராஜா குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்டங்கள், பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளி இடைநின்ற குழந்தைகள் ஆகியோரை கண்டறிந்து, மீண்டும் கல்வியை தொடர வழிவகை செய்தல், குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்: 1098 குறித்துப் பேசினாா்.

சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் சுபாஷினி குழந்தை திருமணம், போக்ஸோ சட்டம் குறித்தும், குழந்தைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும் விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில், நகா்மன்ற உறுப்பினா்கள், காவல் உதவி ஆய்வாளா் மாதவராஜ், நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள், ஸ்ரீராம் நகரில் உள்ள நகா்நல மைய மருத்துவ அலுவலா், குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா், பள்ளி குழந்தைகள், குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com