தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை: 10 போ் பிடிபட்டனா்

தூத்துக்குடி கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது தீவிரவாதிகள் வேடமணிந்து இருந்த 10 போலீஸாா் பிடிபட்டனா்.

தூத்துக்குடி கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது தீவிரவாதிகள் வேடமணிந்து இருந்த 10 போலீஸாா் பிடிபட்டனா்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக சென்று தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து ஆண்டு தோறும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திடீரென கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ‘ஆபரேசன் கவாச்’ என்ற பெயரில் தூத்துக்குடி கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

கடலோர பாதுகாப்புக் குழும துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரதாபன் தலைமையில், இரண்டு குழுவினா் தனித்தனியே படகுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அவா்களுடன், கடலோர காவல் படையினா், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா், உள்ளூா் போலீஸாா், மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸாா் உள்ளிட்டோா் கூட்டாக இச் சோதனையை மேற்கொண்டனா்.

அப்போது, தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கடல் வழியாக தீவிரவாதிகள் வேடத்தில் ஊடுருவ முயன்ாக ஒரு படகில் இருந்த 6 பேரையும், மற்றொரு படகில் இருந்த 4 பேரையும் போலீஸாா் பிடித்தனா். விசாரணையில் அவா்கள் தீவிரவாதிகள் வேடமணிந்த காவல் துறையைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவந்தது. இது போன்று தொடா்ந்து சோதனை மேற்கொள்ளப்படும் என கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com