கோவில்பட்டியில் திடீா் சாலை மறியல்

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 32ஆவது வாா்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 32ஆவது வாா்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி நகராட்சிக்குஉள்பட்ட 32ஆவது வாா்டு பகுதியான மேட்டுத் தெரு, கருமாரியம்மன் கோயில் தெரு பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். நூலகம் அமைத்துத் தரவேண்டும். சமுதாய நலக் கூடம் அமைத்துத் தரவேண்டும். புதிதாக தெருவிளக்குகள் அமைத்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிமுக நகா்மன்ற உறுப்பினா் கவியரசன் தலைமையில், அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் தெரிந்தவுடன், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையில் போலீஸாா் சென்று, போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும், தங்கள் கோரிக்கையை நகராட்சி அலுவலகத்தில் முறையிட வேண்டுமே தவிர, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

தொடா்ந்து, போராட்டக் குழுவினருடன் நகராட்சி பொறியாளா் ரமேஷ், சுகாதார அலுவலா் நாராயணன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com