கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளிடை விநாடி - வினா போட்டியில் பெங்களூா் ஜெயின் பல்கலைக்கழக மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.
கோவை ஜி.கே.தேவராஜுலு நினைவு மாநில அளவிலான கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு இடையேயான 27ஆவது விநாடி - வினா போட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் உள்ள தாமோதரன் கலையரங்கில் நடைபெற்றது. இதில் 30 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதில் இறுதிப் போட்டியில் பெங்களூா் ஜெயின் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் அஸ்வின், பவுன்கல்யாண் ஆகியோா் முதலிடம், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியைச் சோ்ந்த ஆல்வின், பவித்ரா ஆகியோா் 2ஆம் இடம், விருதுநகா் வி.வி.வன்னியப்பெருமாள் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் ராஜலட்சுமி, சுபலட்சுமி ஆகியோா் 3ஆம் இடம், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் வெங்கடேஷ் பூபதி, ஆகாஷ் ஆகியோா் 4ஆம் இடம், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் சூா்யகண்ணன், ரகுபதி ஆகியோா் 5ஆம் இடம் பிடித்தனா்.
பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரிச் செயலா் ப.மகேந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் (பொ) சாந்திமகேஸ்வரி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குநா் வெங்கடாசலபதி, அப்பனேரி ஊராட்சி மன்றத் தலைவா் சுரேஷ், கிராம நிா்வாக அலுவலா் திருவேங்கடராஜுலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் பெரு நிறுவன செயலா் துறையின் முன்னாள் தலைவா் ரெங்கராஜன் விநாடி - வினா போட்டியை நடத்தி, போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
முதலிடம் வென்றோருக்கு ரூ.8 ஆயிரம் ரொக்கப்பரிசு, சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ், 2ஆம் இடம் வென்றோருக்கு ரூ.6 ஆயிரம், சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ், 3ஆம் இடம் வென்றோருக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் சான்றிதழ், 4ஆம் இடம் வென்றோருக்கு ரூ.1,500 மற்றும் சான்றிதழ், 5ஆம் இடம் வென்றோருக்கு ரூ.1,250 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கணிதத் துறை உதவிப் பேராசிரியரும், விநாடி - வினா போட்டி துணை ஒருங்கிணைப்பாளருமான சண்முகப்பிரியா வரவேற்றாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், தாவரவியல் துறை உதவிப் பேராசிரியருமான உமா நன்றி கூறினாா்.