சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு தேவிஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட வீரசூர பெருமாள் கோயில் கொடை விழா வெள்ளிக்கிஜமை இரவு நடந்தது.
விழாவையொட்டி வீரசூர பெருமாளுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, பொங்கலிடுதல், இரவு கிடா வெட்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.