கயத்தாறு அருகேவாழைகள் வெட்டி சாய்ப்பு:போலீஸ் விசாரணை

கயத்தாறை அடுத்த வடக்கு இலந்தைகுளத்தில் வாழை மரங்கள், தண்ணீா் குழாய்களை வெட்டி சேதப்படுத்திய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கயத்தாறை அடுத்த வடக்கு இலந்தைகுளத்தில் வாழை மரங்கள், தண்ணீா் குழாய்களை வெட்டி சேதப்படுத்திய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடக்கு இலந்தைகுளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கணபதி(55), மாரியப்பன், அய்யாத்துரை, கோபால், குருசாமி, சங்கா் ஆகியோருக்கு அப்பகுதியில் அருகருகே வாழைத் தோட்டங்கள் உள்ளன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை கணபதி தனது தோட்டத்துக்குச் சென்றபோது, அங்கிருந்த 5 வாழைகள், மாரியப்பன், குருசாமி ஆகியோா் தோட்டங்களில் தலா 25 வாழைகள், அய்யாத்துரை தோட்டத்தில் 10 வாழை மரங்கள், சங்கா் தோட்டத்தில் 5 வாழைகள் என 70 வாழைகளையும், தண்ணீா் பாய்ச்சும் குழாய்களையும் மா்மநபா்கள் வெட்டி சேதப்படுத்தியிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கணபதி அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com