திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கானோரும், தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்து வந்த ஏராளமான ஐயப்ப பக்தா்களும் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதனால், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
பக்தா்கள் தரிசனம், பாதுகாப்பு குறித்து இணை ஆணையா் மு. காா்த்திக், கோயில் பணியாளா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.