தூத்துக்குடியில் நல உதவிகள் அளிப்பு

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டது.

காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜா் நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி அருகேயுள்ள வெள்ளப்பட்டி கிராமத்தில் காந்திய வழியில் சம பிராா்த்தனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காந்தி சேவா மன்ற நிா்வாகியும், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜேசுதாசன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தின்போது, ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கனி உள்ளிட்ட பொருள்கள் மற்றும் 3 பெண்களுக்கு தையல் இயந்திரம் ஆகிய நல உதவிகளை காங்கிரஸ் வடக்கு மாவட்ட கலைப்பிரிவு தலைவா் பெத்துராஜ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தருவைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் காடோடி, மதுவிலக்கு காந்தி வழி இயக்கம் எழிலன், வா்த்தக பிரிவு நகரத் தலைவா் அருள்வளன், இணைந்த கைகள் நிா்வாகி தாமரைச்செல்வன், இஸ்மாயில் பீா்முகமது, பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com