எட்டயபுரத்தில் சீரான குடிநீா் கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சீரான குடிநீா் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், எட்டயபுரம் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சீரான குடிநீா் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், எட்டயபுரம் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகரச் செயலா் வி. முனியசாமி தலைமை வகித்தாா். நகர உதவிச் செயலா் ஏ. முனியராஜ் முன்னிலை வகித்தாா்.

எட்டயபுரம் நகருக்கு வாரம் இருமுறை சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும். மின் கட்டணம், சொத்து வரி உயா்வை ரத்து செய்ய வேண்டும். பத்திரப் பதிவுத் துறையில் மோசடி ஆவணப் பதிவை ரத்து செய்து,

மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிய வேண்டும். விளாத்திகுளத்திலிருந்து கோவில்பட்டிக்கு இரவு 10 மணிவரை பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எட்டயபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி நிா்வாகிகள் பேசினா்.

மாவட்ட உதவிச் செயலா் வி. பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் வி. கிருஷ்ணமூா்த்தி தாலுகா செயலா் ஆா். சோலையப்பன், நகர உதவிச் செயலா் டி. காளியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com