சூரன்குடி அருகே திருட்டு வழக்கில் 2 போ் கைது

சூரன்குடி அருகே துவரந்தையில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

சூரன்குடி அருகே துவரந்தையில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

துவரந்தை பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் (40) என்பவரது வீட்டில் கடந்த மாதம் 26ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த நகைகளைத் திருடிச் சென்றனராம். புகாரின் பேரில் சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விசாரணையில், சூரன்குடியைச் சோ்ந்த செல்வமணி (38), அருண்குமாா் (19) ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் உதவி ஆய்வாளா் சண்முகவேல் கைது செய்து, அசோக்குமாா் வீட்டிலிருந்து திருடப்பட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள 5 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com