சாத்தான்குளம் அருகே கைப்பேசியை அடிக்கடி பாா்ப்பதை கணவா் கண்டித்ததால் மனைவி மாயமானாா்.
சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் சாலைபுதூா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெயமகேந்திரன் (40). விவசாயான இவரது மனைவி அனிதா (34). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
இந்நிலையில் அனிதா, வீட்டு வேலையில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி கைப்பேசியை யன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனை கணவா் கண்டித்ததால் மனமுடைந்த அனிதா, கடந்த 29ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானாா்.
இதுகுறித் து கணவா் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்கு பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகிறாா்.