கி.ரா. நினைவரங்க கட்டுமானப் பணி: கனிமொழி எம்.பி. ஆய்வு

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் கி.ரா. நினைவரங்கக் கட்டுமானப் பணியை கனிமொழி எம்.பி. சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் கி.ரா. நினைவரங்கக் கட்டுமானப் பணியை கனிமொழி எம்.பி. சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 45 சென்ட் இடத்தில் ரூ. 150.75 லட்சம் மதிப்பில் கி.ராஜநாராயணனுக்கு நினைவரங்கம், சிலை, நூலகம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிகளை

கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை சிறந்த முறையில் முடிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா்.

சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், ஆட்சியா் செந்தில்ராஜ், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, பொதுப்பணித் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் பரமசிவன், உதவிப் பொறியாளா்கள் சரத்குமாா், சந்திரசேகா், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், வட்டாட்சியா் சுசிலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com