தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய மகளிா் திட்டம் சாா்பில் இளைஞா்களுக்கான இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம், வீரபாண்டியன்பட்டணம் ஆதித்தனாா் கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மகளிா் திட்ட இயக்குநா் வீ.வீரபத்திரன் தலைமை வகித்தாா். ஆதித்தனாா் கல்லூரி முதல்வா் சி.மகேந்திரன், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சித் தலைவா் எல்லமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி திட்ட அலுவலா் அருண் பிரசாத், திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடு குறித்து விளக்கமளித்தாா். கல்லூரி செயலா் ச.ஜெயக்குமாா், பேராசிரியா் சித்ரா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
முகாமில் 18 வயது முதல் 45 வயது வரை எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை பயின்ற ஆண்கள், பெண்கள் என சுமாா் 300 போ் கொண்டனா். அவா்களுக்கு 12 நிறுவனங்கள் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்கினா்.
வட்டார வளா்ச்சி அலுவலகா் பெ.பொங்கலரசி வரவேற்றாா். உதவி திட்ட அலுவலா் ஊ.பாலசுந்தரம் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை, வட்டார திட்ட இயக்க மேலாளா் பத்திரகாளி ஒருங்கிணைத்தாா்.