கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்பாள், பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து காலை 6 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ, சங்கத் தலைவா்கள் ராதாகிருஷ்ணன், வெங்கடேசன் சென்னக்கேசவன், தெய்வேந்திரன், முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் திருப்பதிராஜா, நகா்மன்ற உறுப்பினா் விஜயகுமாா், தமாகா நகரத் தலைவா் ராஜகோபால், பொதுக்குழு உறுப்பினா்கள் ராமச்சந்திரன் (அதிமுக), ராதாகிருஷ்ணன் (திமுக), காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மாலை 4 மணிக்கு திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப் பணி விடை , ஸ்ரீபெலிநாதா் அஸ்திரதேவா் திருவீதியுலா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பிராமணா் சமூக மண்டகப்படி சாா்பில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இம்மாதம் 13ஆம் தேதி காலை 9.15 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு தீா்த்தவாரியும், 15ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

விழா நாள்களில் தினமும் காலை, இரவில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வெங்கடேஷ், செயல் அலுவலா் நாகராஜன் ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com