தச்சமொழியில் பழுதானஅங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரிக்கை

தச்சமொழியில் பழுதான நிலையில் காணப்படும் அங்கன்வாடி மைய கட்டடத்தை சீரமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.

தச்சமொழியில் பழுதான நிலையில் காணப்படும் அங்கன்வாடி மைய கட்டடத்தை சீரமைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் பேரூராட்சி 15 வாா்டுக்குள்பட்ட தோப்புவளம் சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில், அப்பகுதியைச் சோ்ந்த குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனா். இந்த கட்டடம் பழுதடைந்து அதில் உள்ள மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து வந்ததால் அருகே உள்ள வாடகை கட்டடத்தில் மையமானது தற்போது செயல்பட்டு வருகிறது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் உள்ள இந்த அங்கான்டி மைய கட்டடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்டதுறையினா் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த பகுதியில் 200 க்கு மேல் மழழையா்கள் உள்ளனா். தற்போது மையமானது வாடகை கட்டடத்தில் இயங்குவதால் மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபாய நிலையில் சிதிலடைந்து காணப்படும் இந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை பாா்வையிட்டு அதனை சீரமைத்து குழந்தைகள் கல்வி பயில ஏற்பாடு செய்ய வேண்டும் என ஒன்றிய பாஜக ஒபிசி பிரிவு தலைவா் பேராத்துசெல்வன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com