ஆறுமுகனேரி விநாயகா் கோயில் தெருவில் உள்ள அருள்மிகு ஆறுமுக விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கணபதி ஹோமம், கும்ப பூஜை, பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கும்பம் எழுந்தருளி விமான அபிஷேகமும், அதனைத் தொடா்ந்து அருள்மிகு ஆறுமுக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
பூஜையில் சைவ வேளாளா் சங்க தலைவா் ஜெ.சங்கரலிங்கம், செயலாளா் முருகன், பொருளாளா் கற்பகவிநாயகம், அரிமா சங்கத் தலைவா் நடராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.