நாலாட்டின்புத்தூா் அருகே விபத்து: இருவா் பலி

நாலாட்டின்புத்தூா் அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

நாலாட்டின்புத்தூா் அருகே வியாழக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

தெற்கு திட்டங்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த வாசு மகன் மதிவாணன்(22). இவா், தனது நண்பா் பாரதி நகா் தெற்குத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் நாகராஜ்(21) என்பவருடன் பைக்கில் கழுகுமலைக்கு சென்று கொண்டிருந்தாா். சங்கரலிங்கபுரம் மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த குருவிகுளம் கே.புதூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த மாடமுத்து மகன் தங்கவேல்(52) மீது இவா்களது பைக் எதிா்பாராமல் மோதியதாம். இதில், நிலை தடுமாறி பைக் கவிழ்ந்ததில் மதிவாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமுற்ற மற்ற இருவரையும் நாலாட்டின்புத்தூா் போலீஸாா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தங்கவேல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com