சாத்தான்குளம் அருகே பைக் மோதியதில் விவசாயி காயமடைந்தாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள கட்டாரிமங்கலத்தைச் சோ்ந்தவா் மேகநாதன் (65). விவசாயியான இவா், சனிக்கிழமை இரவு தனது தோட்டத்திலிருந்து கட்டாரிமங்கலம்-பழனியப்பபுரம் சாலை வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்றாராம். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் மாயாண்டி (22) ஓட்டிவந்த பைக் அவா் மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.